கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிரான்ஸ் இன்னும் போதுமான அளவு தயாராகவில்லை என்பதால், நாட்டில் அடுத்த மாதம் 11-ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இன்னும் கொரோனாவின் தீவிரம் குறையாத காரணத்தினால் பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இது குறித்து நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இன்று தொலைக்காட்சி உரையில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.
Adresse aux Français. https://t.co/sEeWhau5Mo
— Emmanuel Macron (@EmmanuelMacron) April 13, 2020
இதையடுத்து இன்று மாலை எலிசி அரண்மனையில் இருந்து பேசிய ஜனாதிபதி மேக்ரான், அதில் ஊரடங்கு உத்தரவு மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் மே 11 வரை நீடிக்கும், என்று தெரிவித்த்துள்ளார்.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிரான்ஸ் தயாராக இல்லை என்றும், சுகாதார அமைப்புகள் மற்றும் முதியோர் பராமரிப்பு வசதிகளில் தோல்விகள் மற்றும் பற்றாக்குறைகள் இருப்பதை மேக்ரான் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து இன்று மாலை எலிசி அரண்மனையில் இருந்து பேசிய ஜனாதிபதி மேக்ரான், அதில் ஊரடங்கு உத்தரவு மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் மே 11 வரை நீடிக்கும், என்று தெரிவித்த்துள்ளார்.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிரான்ஸ் தயாராக இல்லை என்றும், சுகாதார அமைப்புகள் மற்றும் முதியோர் பராமரிப்பு வசதிகளில் தோல்விகள் மற்றும் பற்றாக்குறைகள் இருப்பதை மேக்ரான் ஒப்புக் கொண்டார்.
முகமூடிகள் வழங்குவது முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை எல்லாவற்றிலும் சிக்கல்கள் இருந்தன . சுகாதார ஊழியர்களிடம் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டார்.
மேலும், இந்த நீட்டிப்பிற்கு முக்கிய காரணம், கொரோனா அறிகுறிகளைக் கொண்ட எவரையும் மே 11-க்குள் சோதித்துவிடலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். இந்த திகதியில் அறிகுறிகள் கொண்ட அனைவரையும் சோதிக்க முடியும் என்று நம்புகிறோம்.
விதிகளை மதிக்கும் பொறுப்புள்ள குடிமகனாக தொடர்ந்து இருந்தால் மட்டுமே மே 11-ஆம் திகதிக்குள் இது சாத்தியமாகும், ஏனெனில் வைரஸின் பரவல் உண்மையில் மெதுவாகவே தொடர்வதாக எச்சரித்தார்.
மேலும், கொரோனா வைரஸ் நெருக்கடி நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கப்பட்ட செலவு 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரான்ஸ் மிக மோசமான மந்தநிலையில் நுழைவதால், இதை சமாளிப்பதற்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக தேவைப்படும் என்று நிதியமைச்சர் புருனோ லு மைர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.